Saturday, September 22, 2012

முன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் அண்ணாமலை அன்னதானம்!!!

                             நமது கர்மவினையை மாற்றும் சக்தி (கலியுகத்தில்) அன்னதானத்துக்கு மட்டுமே உண்டு என்ற ஆன்மீகப் பேருண்மையை ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் கண்டறிந்துள்ளார்.ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகளாகிய நீங்கள், உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் வெகு விரைவாக தீரவே அன்னதானத்திலேயே மிக உன்னதமான அன்னதானத்தை தங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அவ்வளவு புண்ணியம் காசியில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;
காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டு வரை தினமும் அன்னதானம் நாம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும்? அவ்வளவு புண்ணியம் நம்ம அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்; துவாதசி திதியன்று அண்ணாமலையில் ஒரு வேளைக்கு ஒருவர் வீதம்,மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?நாம் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் ஒவ்வொரு நாளும் 1,00,00,000 (ஒரு கோடி)பேர்களுக்கு காசியில் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விட அதிகமான புண்ணியம் நமக்குக் கிடைக்கும்.அது மட்டுமா? ,மேலும் மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும்.ஆதாரம்:சிவமஹாபுராணம்(சிவபுராணம்)
திரு அண்ணாமலையில் துவாதசி திதியன்று மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும் என்பதை ஒரு துறவி எனக்கு உபதேசித்தார்.இதை ஒரே ஒரு முறை அண்ணாமலையில் பரிசோதித்துப் பார்த்ததில் உண்மை என்பது மட்டுமல்ல;பூர்வபுண்ணியம் உள்ளவர்களே இவ்வாறு அன்னதானம் செய்ய முடியும் என்பதையும்,அந்த துவாதசி அன்னதானத்தை நமது முன்னோர்கள் சூட்சுமமாக வந்து ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் உணர்வுபூர்வமாக உணர முடிந்தது.எனவே எனது சகோதர,சகோதரிகளுக்காக இந்த ஜோதிடக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.
நமது கடந்த ஐந்துபிறவிகளில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே நாம் இந்த ஜன்மத்தில் மனிதபிறவி எடுத்திருக்கிறோம்.அதே போல,நமது பெற்றோர்களின் ஐந்து முந்தைய தலைமுறையினர் செய்த நல்வினைகள் மற்றும் தீவினைகளின் தொகுப்பில் எட்டில் ஒரு பங்கையும் சேர்த்தே அனுபவிக்கும் விதமாக நமது பிறப்பும்,நமது ஜனன ஜாதகமும் அமைந்திருக்கிறது.இந்த உண்மையை உணர 12 வருடங்களாக பலதரப்பட்ட மக்களின் ஜாதகங்களை ஆராய்ந்து கண்டுபிடிக்க முடிந்தது.மீதி ஏழு பங்குகள் பிற நமது தாத்தா பாட்டியின் பேரன் பேத்திகளுக்கு பிரிந்துவிடும்.
நமது கர்மாக்களை நாம்தான் அனுபவிக்க வேண்டும்.நம் சார்பாக வேறு யாரும் அதைச் சுமக்க முடியாது;மாற்ற முடியாது;பூஜைகள்,பரிகாரங்கள் மூலமாக நமது தீயக்கர்மாக்களை நம்மால் குறைக்க முடிந்தாலும்,அந்த பூஜைகள்,பரிகாரங்களில் நாம் நேரடியாகக் கலந்து கொண்டால் மட்டுமே நமது தீயக்கர்மவினைகள் குறையத்துவங்கும்;அதே சமயம் அந்த பூஜைகள்,பரிகாரங்களை நாம் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும்.அப்போதுதான் அவைகள் சூட்சுமமாகச் செயல்படும். 
சனியும்,செவ்வாயும் ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஒரே ராசியில் இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் விதமாக ஏழாம் ராசியில் இருந்தாலோ அல்லது நான்காம் ராசி மற்றும் பத்தாம் ராசியில் இருந்தாலே அது கடுமையான கர்மவினைகளைக் காட்டுகிறது.நாம் முற்பிறவிகளில் செல்வச் செருக்கோடு நமது ரத்த உறவுகளின் பலவீனத்தைக் கொண்டு அவர்களை நிம்மதியாக வாழ விடாமல் செய்திருக்கிறோம் என்பதும்;இந்த ஜன்மத்தில் அதே மாதிரியான வேதனைகளை நாம் அனுபவிக்கப்பிறந்திருக்கிறோம் என்பதும் உண்மை.
மேலும் நாம் எந்த வழிவம்சத்தில் பிறந்திருக்கிறோமோ அந்த வழி வம்சத்தில் நமது தாத்தா பாட்டி காலம் வரையிலும் சொத்துக்காகவோ வேறு சிலபல காரணங்களுக்காகவே பல ஆண்டுகள் சண்டையிட்டுருக்கிறார்கள்.அப்போது பலவீனமான நமது முன்னோர்களின் பெண் உறவுகள் கடுமையாக சாபமிட்டிருக்கிறார்கள் என்றே அர்த்தம் ஆகும்.அந்த சாபத்தை நமது குடும்பத்தில் நாம் மட்டுமே அனுபவிக்கப் பிறந்திருக்கிறோம் என்று பொருள்.ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் இருந்தால்,அதில் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டுமே இவ்வாறு அதன் பிறந்த ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருக்கும்;அல்லது ஒருவரையொருவர் பார்க்கும் விதமாக அமைந்திருக்கும்.

Thursday, September 20, 2012

தேவாரப் பாடல் பெற்ற சிவதலங்கள் 264

 தேவாரப் பாடல் பெற்ற சிவதலங்கள் 264


1)சங்கமேஸ்வரர் திருநணா (பவானி)
2)அர்த்தநாரீஸ்வரர் திருச்செங்கோடு
3)பசுபதிநாதர் கருவூர் (கரூர்)
4)திருமுருகநாதசுவாமி திருமுருகப்பூண்டி
5)கொடுமுடிநாதர் திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)
6)அவிநாசியப்பர் திருப்புக்கொளியூர் (அவிநாசி)
7)விகிர்தநாதேஸ்வரர் வெஞ்சமாக்கூடல்
8)தீர்த்தபுரீஸ்வரர் திருநெல்வாயில் அரத்துறை
9)சுடர்கொழுந்தீசர் தூங்கானை மாடம் (பெண்ணாகடம்)
10)நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கூடலையாற்றுர்
11)திருநீலகண்டர் திருஎருக்கத்தம்புலியூர்
12)சிவக்கொழுந்தீசர் திருத்திணை நகர்
13)சோபுரநாதர் திருச்சோபுரம்
14)அதிகை வீரட்டநாதர் திருவதிகை
15)திருநாவலேஸ்வரர் திருநாவலூர்
17)பழமலைநாதர் திருமுதுகுன்றம்
18)வெண்ணையப்பர் திருநெல்வெண்ணை
19)வீரட்டேஸ்வரர் திருக்கோவிலூர்
20)அறையணிநாதர் திருஅறையணிநல்லூர்
21)இடையாற்று நாதர் திருவிடையாறு
22)தடுத்து ஆட்கொண்டநாதர் திருவெண்ணைநல்லுர்
23)சிஷ்டகுருநாதர் திருத்துறையூர்
24)வடுகூர்நாதர் வடுகூர்
25)வாமனபுரீஸ்வரர் திருமாணிகுழி
26)பாடலீஸ்வரர் திருப்பாதிரிப்புலியூர்
27)சிவலோக நாதர் திருமுண்டீச்சரம்
28)பனங்காட்டீசர் புறவர் பனங்காட்டூர்
29)அழகிய நாதர் திரு ஆமாத்தூர்
30)அருணாசலேஸ்வரர் திருவண்ணாமலை
31)சொக்கநாதர் திருஆலவாய் (மதுரை)
32)ஆப்புடையார் திருஆப்பனுர்
33)பரங்கிரிநாதர் திருப்பரங்குன்றம்
34)ஏடகநாதேஸ்வரர் திருவேடகம்
35)கொடுங்குன்றீசர் திருகொடுங்குன்றம்
36)திருத்தளிநாதர் திருப்புத்துர்
37)பழம்பதிநாதர் திருப்புனவாயில்
38)இராமநாதசுவாமி இராமேஸ்வரம் (ஜோதிர்லிங்க ஸ்தலம்)
39)ஆடானைநாதர் திருவாடானை
40)காளையப்பர் திருக்கானப்பேர் (காளையார்கோவில்)
41)பூவணநாதர் திருப்பூவணம்
42)திருமேனிநாதர் திருச்சுழியல்
43)குறும்பலாநாதர் குற்றாலம்
44)நெல்லையப்பர் திருநெல்வேலி
45)ஏகாம்பரேஸ்வரர் கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்)
46)திருமேற்றளிநாதர் திருக்கச்சி மேற்றளி
47)ஓணகாந்தேஸ்வரர் திருஓணகாந்தான்தளி
48)அநேகதங்கா பதேஸ்வரர் கச்சி அநேகதங்காபதம்
49)காரை திருநாதேஸ்வரர் கச்சிநெறிக் காரைக்காடு
50)வாலீஸ்வரர் திருகுரங்கணில் முட்டம்
51)அடைக்கலம்காத்த நாதர் திருமாகறல்
52)வேதபுரீஸ்வரர் திருவோத்தூர்
53)பனங்காட்டீஸ்வரர் திருப்பனங்காட்டூர்
54)வில்வநாதேஸ்வரர் திருவல்லம்
55)மணிகண்டேஸ்வரர் திருமாற்பேறு
56)ஜலநாதேஸ்வரர் திருஊறல் (தக்கோலம்)
57)தெய்வநாதேஸ்வரர் இலம்பையங்கோட்டூர்
58)திரிபுரநாதர் திருவிற்கோலம்
59)வடாரண்யேஸ்வரர் திருவாலங்காடு
60)வாசீஸ்வரர் திருப்பாசூர்
61)ஊண்றீஸ்வரர் திருவெண்பாக்கம்
62)சிவானந்தேஸ்வரர் திருக்கள்ளில்
63)ஆதிபுரீசர்# படம்பக்கநாதர் திருவொற்றியூர் (சென்னை)
64)வலிதாய நாதர் திருவலிதாயம்
65)மாசிலாமனி ஈஸ்வரர் திருமுல்லைவாயில்
66)வேதபுரீசர் திருவேற்காடு
67)கபாலீஸ்வரர் திருமயிலை (சென்னை)
68)மருந்தீஸ்வரர் திருவான்மியூர் (சென்னை)
69)விருந்திட்ட ஈஸ்வரர் திருக்கச்சூர் ஆலக்கோவில்
70)ஞானபுரீஸ்வரர் திருஇடைச்சுரம்
71)வேதகிரீஸ்வரர் திருக்கழுகுன்றம்
72)ஆட்சீஸ்வரர் அச்சிறுபாக்கம்
73)சந்திரசேகர் திருவக்கரை
74)அரசிலிநாதர் திருஅரசிலி
75)மாகாளேஸ்வரர் இரும்பை மாகாளம்
76)நடராஜர் சிதம்பரம்
77)பாசுபதேஸ்வரர் திருவேட்களம்
78)உச்சிநாதேசுவரர் திருநெல்வாயல்
79)பால்வண்ண நாதர் திருக்கழிப்பாலை
80)சிவலோக தியாகேசர் திருநல்லுர் பெருமணம்
81)திருமேனிஅழகர் திருமயேந்திரப்பள்ளி
82)முல்லைவன நாதர் தென்திருமுல்லைவாசல்
83)சுந்தரேஸ்வரர் திருக்கலிக்காமூர்
84)சாயாவனேஸ்வரர் திருசாய்க்காடு (சாயாவனம்)
85)பல்லவனேஸ்வரர் திருபல்லவனீச்சுரம்
86)சுவேதஆரன்யேஸ்வரர் திருவெண்காடு
87)ஆரண்ய சுந்தரேஸ்வரர் கீழை திருக்காட்டுப்பள்ளி
88)வெள்ளடையீசுவரர் திருக்குருகாவூர் வெள்ளடை
89)பிரம்மபுரீசர் சீர்காழி
90)சத்தபுரீசுவரர் திருகோலக்கா
91)வைத்தியநாதர் திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)
92)கண்ணாயிரநாதர் திருக்கண்ணார்கோவில் ( குறுமானக்குடி )
93)கடைமுடிநாதர் திருக்கடைமுடி
94)மஹாலக்ஷ்மி நாதர் திருநின்றியூர்
95)சிவலோகநாதர் திருபுன்கூர்
96)அருட்சோம நாதேஸ்வரர் நீடூர்
97)ஆபத்சகாயேஸ்வரர் திருஅன்னியூர்
98)கல்யாணசுந்தரர் திருவேள்விக்குடி
99)ஐராவதேஸ்வரர் திருஎதிர்கொள்பாடி
100)அருள்வள்ள நாதர் திருமணஞ்சேரி
101)வீரட்டேஸ்வரர் திருக்குருக்கை
102)குற்றம் பொருத்த நாதர் திருக்கருப்பறியலூர்
103)கோந்தல நாதர் திருக்குரக்குக்கா
104)மாணிக்கவண்ணர் திருவாளொளிப்புத்தூர்
105)நீலகண்டேசர் திருமண்ணிப்படிக்கரை
106)துயரந்தீர்த்தநாதர் திருஓமாம்புலியூர்
107)பதஞ்சலி நாதர் திருக்கானாட்டுமுல்லூர்
108)சௌந்தரேசுவரர் திருநாரையூர்
109)அமிர்தகடேசர் திருக்கடம்பூர்
110)பசுபதி நாதர் திருபந்தனைநல்லூர்
111)அக்னீஸ்வரர் திருகஞ்சனூர்
112)திருக்கோடீஸ்வரர் திருகோடிக்கா
113)பிராண நாதேஸ்வரர் திருமங்கலக்குடி
114)செஞ்சடையப்பர் திருப்பனந்தாள்
115)பாலுகந்த ஈஸ்வரர் திருஆப்பாடி
116)சத்யகிரீஸ்வரர் திருசேய்ஞலூர்
117)கற்கடேஸ்வரர் திருந்துதேவன்குடி ( நண்டாங்கோவில் )
118)சிவயோகிநாத சுவாமி திருவியலூர்
119)கோடீஸ்வரர் திருக்கொட்டையூர்
120)எழுத்தறிநாதர் திருஇன்னாம்பர்
121)சாட்சி நாதேஸ்வரர் திருப்புறம்பியம்
122)விஜயநாதர் திருவிசயமங்கை
123)வில்வவனநாதர் திருவைகாவூர்
124)தயாநிதீஸ்வரர் வடகுரங்காடுதுறை
125)ஆபத்சகாயநாதர் திருப்பழனம்
126)ஐயாரப்பர் திருவையாறு
127)நெய்யாடியப்பர் திருநெய்த்தானம்
128)வியாக்ர புரீசர் திருப்பெரும்புலியூர்
129)வஜ்ரதம்ப நாதர் திருமழபாடி
130)வடமூலநாதர் திருப்பழுவூர்
131)செம்மேனி நாதர் திருக்கானூர்
132)சத்யவாகீஸ்வரர் திருஅன்பில் ஆலாந்துறை
133)ஆம்பிரவன நாதர் திருமாந்துறை
134)திருமூலநாதர் திருபாற்றுறை
135)ஜம்புகேஸ்வரர் திருவானைக்கா
136)ஞீலிவனேஸ்வரர் திருபைஞ்ஜிலி
137)மாற்றுறை வரதீஸ்வரர் திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
138)மரகதேஸ்வரர் திருஈங்கோய்மலை
139)ரத்னகிரிநாதர் திருவாட்போக்கி
140)கடம்பவன நாதேஸ்வரர் திருகடம்பந்துறை
141)பராய்த்துறை நாதர் திருப்பராய்த்துறை
142)உஜ்ஜீவ நாதர் திருகற்குடி
143)பஞ்சவர்னேஸ்வரர் திருமூக்கீச்சரம் (உறையூர்# திருச்சி)
144)தாயுமானவர் திருச்சிராப்பள்ளி
145)எறும்பீசர் திருஎறும்பியூர் (திருவெறும்பூர்)
146)நித்திய சுந்தரர் திருநெடுங்களம்
147)தீயாடியப்பர் மேலை திருக்காட்டுப்பள்ளி
148)ஆத்மநாதேஸ்வரர் திருவாலம்பொழில்
149)புஷ்பவன நாதர் திருபூந்துருத்தி
150)பிரம்மசிரகண்டீசர் திருக்கண்டியூர்
151)தொலையாச்செல்வர் திருசோற்றுத்துறை
152)வேதபுரீசர் திருவேதிகுடி
153)வசிஷ்டேஸ்வரர் திருதென்குடித்திட்டை
154)ஆலந்துறை நாதர் திருபுள்ளமங்கை
155)சக்ரவாகேஸ்வரர் திருசக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை)
156)முல்லைவன நாதர் திருக்கருகாவூர்
157)பாலைவன நாதர் திருப்பாலைத்துறை
158)கல்யாண சுந்தரேஸ்வரர் திருநல்லூர்
159)பசுபதீஸ்வரர் ஆவூர் பசுபதீச்சரம்
160)சிவகொழுந்தீசர் திருசத்திமுற்றம்
161)தேனுபுரீஸ்வரர் திருபட்டீச்சரம்
162)சோமேஸ்வரர் பழையாறை வடதளி
163)கற்பகநாதர் திருவலஞ்சுழி
164)கும்பேஸ்வரர் திருக்குடமூக்கு (கும்பகோனம்)
165)நாகேஸ்வரசுவாமி திருக்குடந்தை கீழ்கோட்டம்
166)காசி விஸ்வநாதர் திருக்குடந்தைக் காரோணம்
167)சண்பக ஆரண்யேஸ்வரர் திருநாகேஸ்வரம்
168)மஹாலிங்கேஸ்வரர் திருவிடைமருதூர்
169)ஆபத்சகாயநாதர் தென்குரங்காடுதுறை
170)நீலகண்டேஸ்வரர் திருநீலக்குடி
171)வைகன் நாதர் திருவைகல் மாடக்கோவில்
172)உமாமஹேஸ்வரர் திருநல்லம்
173)கோகிலேஸ்வரர் திருக்கோழம்பம்
174)மாசிலாமனி ஈஸ்வரர் திருவாவடுதுறை
175)உக்தவேதீஸ்வரர் திருத்துருத்தி (குத்தாலம்)
176)வேதபுரீஸ்வரர் திருவழுந்தூர்
177)மயூரநாதர் மயிலாடுதுறை
178)துறைகாட்டும் வள்ளலார் திருவிளநகர்
179)வீரட்டேஸ்வரர் திருப்பறியலூர் (பரசலூர்)
180)சுவர்ணபுரீசர் திருசெம்பொன்பள்ளி
181)நற்றுணையப்பர் திருநனிபள்ளி (புஞ்ஜை)
182)வலம்புரநாதர் திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)
183)சங்கருனாதேஸ்வரர் திருதலைச்சங்காடு
184)தான்தோன்றியப்பர் திருஆக்கூர்
185)அமிர்தகடேஸ்வரர் திருக்கடவூர்
186)பிரம்மபுரீஸ்வரர் திருக்கடவூர் மயானம்
187)திருமேனிஅழகர் திருவேட்டக்குடி
188)பார்வதீஸ்வரர் திருதெளிச்சேரி (கோயில்பத்து)
189)யாழ்மூரிநாதர் திருதர்மபுரம்
190)தர்பாரண்யேஸ்வரர் திருநள்ளாறு
191)ஐராவதேஸ்வரர் திருக்கோட்டாறு
192)பிரம்மபுரீசர் அம்பர் பெருந்திருக்கோவில்
193)மாகாளநாதர் அம்பர் மாகாளம்
194)முயற்சிநாதேஸ்வரர் திருமீயச்சூர்
195)சகலபுவனேஸ்வரர் திருமீயச்சூர் இளங்கோவில்
196)மதிமுத்தீஸ்வரர் திருதிலதைப்பதி
197)பாம்பு புரேஸ்வரர் திருப்பாம்புரம்
198)மங்களநாதர் சிறுகுடி
199)நேத்ரார்பனேஸ்வரர் திருவீழிமிழிலை
200)அக்னீஸ்வரர் திருவன்னியூர்
201)சற்குனநாதேஸ்வரர் தி)ருக்கருவிலிக்கொட்டிட்டை
201)சிவானந்தேஸ்வரர் திருபேணுபெருந்துறை
202)சித்தி நாதேஸ்வரர் திருநறையூர்
203)படிக்காசு அளித்த நாதர் அரிசிற்கரைப்புத்தூர்
204)சிவபுரநாதர் சிவபுரம்
205)அமிர்தகலேஸ்வரர் திருகலயநல்லூர்
206)சற்குனலிங்கேஸ்வரர் திருக்கருக்குடி
207)வாஞ்சிநாதர் திருவாஞ்சியம்
208)மதுவனேஸ்வரர் நன்னிலம்
209)பசுபதீஸ்வரர் திருகொண்டீச்சரம்
210)சௌந்தர்யநாதர் திருப்பனையூர்
211)வீரட்டானேஸ்வரர் திருவிற்குடி
212)அக்னீஸ்வரர் திருப்புகலூர்
213)வர்த்தமானேஸ்வரர் திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம்
214)இராமணதேஸ்வரர் இராமனதீச்சுரம்
215)திருபயற்றுநாதர் திருபயற்றூர்
216)உத்தராபதீஸ்வரர் திருசெங்கட்டாங்குடி
217)இரத்தினகிரீஸ்வரர் திருமருகல்
218)அயவந்தீஸ்வரர் திருச்சாத்தமங்கை
219)காயாரோகனேஸ்வரர் நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்)
220)வெண்ணைலிங்கேஸ்வரர் சிக்கல்
221)கேடிலியப்பர் திருக்கீழ்வேளூர்
222)தேவபுரீஸ்வரர் தேவூர்
223)முக்கோண நாதேஸ்வரர் பள்ளியின் முக்கூடல்
224)வன்மீகி நாதர் திருவாரூர்
225)அறனெறியப்பர் திருவாரூர் அரநெறி
226)தூவாய் நாயனார் ஆரூர் பறவையுன்மண்டளி
227)பதஞ்சலி மனோஹரர் திருவிளமர்
228)கரவீரநாதர் திருக்கரவீரம்
229)பிரியாதநாதர் திருப்பெருவேளுர்
230)ஆடவல்லீஸ்வரர் திருதலையாலங்காடு
231)கோனேஸ்வரர் திருக்குடவாயில்
232)செந்நெறியப்பர் திருச்சேறை
233)ஞானபரமேஸ்வரர் திருநாலூர் மயானம்
234)சொர்ணபுரீசுவரர் திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்
235)ஆபத்சகாயேஸ்வரர் திருஇரும்பூளை (ஆலங்குடி)
236)பாதாளேஸ்வரர் திருஅரதைப் பெரும்பாழி (ஹரிதுவார மங்கலம்)
237)சாட்சி நாநர் திருஅவளிவநல்லூர்
238)பரிதியப்பர் திருப்பரிதிநியமம்
239)வெண்ணிக்கரும்பர் திருவெண்ணியூர்
240)புஷ்பவனநாதர் திருப்பூவனூர்
241)சர்ப்ப புரீஸ்வரர் திருப்பாதாளீச்சரம்
242)களர்முலைநாதேஸ்வரர் திருக்களர்
243)பொன்வைத்த நாதேஸ்வரர் திருசிற்றேமம்
244)மந்திர புரீஸ்வரர் திருவுசத்தானம்
245)சற்குனநாதேஸ்வரர் திருஇடும்பாவனம்
246)கற்பகநாதர் திருக்கடிக்குளம்
247)நீணெறிநாதர் திருத்தண்டலை நீணெறி
248)கொழுந்தீசர் திருக்கோட்டூர்
249)வெண்டுறைநாதர் திருவெண்டுறை
250)வில்வவனேஸ்வரர் திருக்கொள்ளம்புதூர்
251)ஜகதீஸ்வரர் திருப்பேரெயில்
252)அக்னீஸ்வரர் திருக்கொள்ளிக்காடு
253)வெள்ளிமலைநாதர் திருதெங்கூர்
254)நெல்லிவனநாதேஸ்வரர் திருநெல்லிக்கா
255)மாணிக்கவண்ணர் திருநாட்டியாத்தான்குடி
256)கண்ணாயிரநாதர் திருக்காறாயில்
257)நடுதறியப்பர் திருகன்றாப்பூர்
258)மனத்துனைநாதர் திருவலிவலம்
259)கைசின நாதேஸ்வரர் திருகைச்சினம்
260)கோளிலிநாதர் திருக்கோளிலி
261)வாய்மூர்நாதர் திருவாய்மூர்
262)மறைக்காட்டு மணாளர் திருமறைக்காடு (வேதாரண்யம்)
263)அகஸ்தீஸ்வரர் அகத்தியான்பள்ளி
 264)அமிர்தகடேஸ்வரர் கோடியக்கரை

அட்டவீரட்டானக் கோயில
சிவபெருமானின் வீரம் குறித்த பெருமைகளைக் குறிப்பிடும் எட்டு கோயில்கள் அட்டவீரட்டானக் கோயில்கள் எனப்படுகின்றன. அவை

திருக்கண்டியூர் - பிரம்மன் சிரத்தைச் சிவன் கொய்தது
திருக்கோவலூர் - அந்தகாசுரனைச் சங்கரித்தது
திருவதிகை - திரிபுரம் எரித்தது
திருப்பறியலூர் - தக்கன் சிரம் கொய்தது
வழுவூர் - யானையை உரித்தது
திருவிற்குடி - சலந்தாசுரனைச் சங்கரித்தது
திருக்குறுக்கை - காமனை எரித்தது.
திருக்கடவூர் - எமனை உதைத்தது.


சித்தர் சத்ரு சம்ஹாரமூர்த்தி அடிகள்

                                              திருச்சி மண்டல தீயணைப்பு நிலையங்களில் மகிழ மரத்தடியில் கோயில் கொண்டு அருள்புரிகிறார் சித்தர் ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி. சித்தராக வாழ்ந்த இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அன்புகோவில் கிராமத்தை சேர்ந்தவர்கள் நல்லமுத்து பிள்ளை, பொன்னம்மாள் தம்பதி. இவர்கள் திருச்சி மாவட்டம் வாதிரிப்பட்டியில் குடியிருந்தனர். இவர்களுக்கு மூன்றாவது குழந்தையாக 13.6.1880ல் ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி பிறந்தார். அவருக்கு கனகசபாபதி என பெயரிடப்பட்டது. 1901ம் ஆண்டு இவருக்கும், மாமன் மகள் சொர்ணத்தம்மாளுக்கும் திருமணம் நடந்தது. பொன்னமராவதியில் அரசு ஆசிரியராக வேலை பார்த்தார். நல்ல நூல்களை படிக்கும் வழக்கத்தை குருநாதர் மேற்கொண்டார். 1915ம் ஆண்டு சிதம்பரம் கோயில் கும்பாபிஷேகததிற்கு சென்ற குருநாதர் ஆறுமாதம் வரை வீடு திரும்பவில்லை. ஓராண்டு கழித்து குருநாதர் கண்டுபிடிக்கப்பட்டார். 1917ம் ஆண்டு மீண்டும் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. 11 ஆண்டுகள் கடந்த பின்னர் 1928ம் ஆண்டு திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில் தவக்கோலத்தில் அடிகளார் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.
திருச்சி கோர்ட் வளாகத்தில் உள்ள மகிழ மரத்தடியில் குருநாதர் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். ஒரு சமயம் சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் பிள்ளை என்பவர், குருநாதரிடம் தனது வழக்கு தள்ளுபடியாக வேண்டும் என்று வேண்டினார். குருநாதரும் அவ்வாறே தள்ளுபடியாகும் என்று கூறி திருநீறு அளித்தார். அதன்படியே ஞானப்பிரகாசம் பிள்ளையின் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். அது முதல் குருநாதரிடம் அவருக்கு நெருக்கம் அதிகமானது. இந்நிலையில் குருநாதர் பேரரசர் ஆறாம் ஜார்ஜ் படத்திற்கு கோர்ட் வளாகத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார். இதைகண்ட போலீஸ் அதிகாரி ஒருவர் குருநாதரை தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார். ஞானப்பிரகாசம் பிள்ளை ஓடிச்சென்று தடுத்து, குருநாதரை சோழமாதேவியில் தன் வீட்டில் தங்க வைத்தார். குருநாதரை எட்டி உதைத்த போலீஸ் அதிகாரிக்கு கை கால்கள் இழுத்துக் கொண்டது. உடன் சுவாமிகளை தேடி வந்தார். குருநாதரும் மன்னித்து ஆசி வழங்கினார். அதன் பின்னர் அந்த அதிகாரி சுவாமிகளை மீண்டும் கோர்ட் வளாகத்திற்கே அழைத்து வந்து பணிவிடை செய்தார்.
குருநாதர் 11.10.1938 செவ்வாய்கிழமை பரணி நட்சத்திரத்தில் காலை 6.15 மணிக்கு திருச்செந்தூர் திருமுன்பில் ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி அடிகள் எனப்பெயர் பெற்று ஒளிவடிவாய் அமைதி ஆலயம் பெற்றார். பின்னர் திருச்சி கோர்ட் வளாகத்தில் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள மகிழ மரத்தடியில் சுவாமிகளுக்கு அழகிய கோயில் கட்டப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. குருநாதர் தியானம் செய்த மகிழ மரத்தை சுற்றி சுவர் எழுப்பி, ஞாபகச் சின்ன கல்வெட்டு வைக்கப்பட்டது. 1985ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தீயணைப்பு வீரர்களுக்கு இவர் மீது பக்தி அதிகம் என்பதால் திருச்சி ஸ்ரீரங்கம், துறையூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், இலுப்பூர், ஆலங்குடி, நாகப்பட்டினம், நன்னிலம், கரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய ஊர்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் குருநாதரின் ஆலயம் அமைந்துள்ளது. வியாழக்கிழமைகளில் பூஜையும், ஆண்டுதோறும் குருபூஜையும் நடந்து வருகிறது.
                                            

                                    

Thursday, September 13, 2012

தினசரி மாலை 7 மணி முதல் 7.05 மணி வரை வழிபாட்டு முறை


                                                                           
                                                                     சிவமயம்

                                              திரு ஆருரா! தியாகேசா !
                                     நால்வர் வழி யாத்ரா திருகூட்டம்
     தினசரி மாலை 7 மணி முதல் 7.05 மணி வரை வழிபாட்டு முறை

உலகத்தில் உள்ள சிவனடியார்களும் , அயலார்களும்
திருஆரூர் பெருமானின் திருஅருள் துணை கொண்டு
தினசரி மாலை 7  மணி முதல் 7.05 மணி வரை  வடதிசை
நோக்கி அவரவர் விண்ணப்பங்கள் , வேண்டுதல்களை
இந்த குறிபிட்ட நேரத்தில் வைத்து கூட்டு வழிபாடு பிரார்த்தனைகளை
கடைபிடிக்குமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

இந்த வழிபாடு நேரத்தில் சொல்லவேண்டிய பதிகங்களும் , முறைகளும்

1 எந்த இடத்திலும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் வட திசை நோக்கி பிரார்த்தனை
   செய்யலாம் .( கைலாயம் வட திசையில் இருப்பதினால் )
2 முதலில் அவரவர் விண்ணப்பங்களை பெருமானை நினைத்து வைக்க வேண்டும்
3 நால்வர் துதி சொல்லி வழிபாட்டினை தொடங்க வேண்டும் .

           பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
           ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி
           வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
            ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி,,,,,  

4 சிவாய நம முடிந்தவரை சொல்ல வேண்டும்.
5 வான்முகில் வழாது பெய்க என தொடங்கும் வாழ்த்து சொல்லி முடிக்க வேண்டும்.
   
           வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
           கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
           நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
           மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்                                                                              
                                                                               

                                    திருஆருரா வீதிவிடங்கா

நாமும் நாடும் வளம் பெற தினசரி  7  மணி அளவில் ஒரு ஐந்து நிமிடம் ஆரூர் பெருமான்

உலக உயிர்கள் உய்யும் பொருட்டு அருள் புரிய பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம் .

மேலும் தொடர்புக்கு :


சிவத்திரு . மாரிமுத்து ஐயா

திருஆரூர்
9842545536